
கொழும்பின் பல பகுதிகளில் 13ஆம் திகதி மாலை முதல் நீர் விநியோகம் தடைப்படும் என தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை அறிவித்துள்ளது.
கொழும்பு 11, 12, 13, 14 மற்றும் 15 ஆகிய பகுதிகளில் 13ஆம் திகதி மாலை 5 மணி முதல் நாளை காலை 9 மணி வரை 16 மணித்தியாலங்களுக்கு நீர் விநியோகம் தடைப்படும் என அந்த அந்த சபை தெரிவித்துள்ளது.
அம்பத்தலை நீர் விநியோகத்தின் அத்தியாவசிய பராமரிப்பு நடவடிக்கை காரணமாக இவ்வாறு நீர் விநியோகம் தடைப்படவுள்ளதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை அறிவித்துள்ளது.