
ஜனவரியிலவெகுவிரைவில் பாராளுமன்றம் கலைக்கப்படலாம் என்று கொழும்பு அரசியல் தகவல்கள் தெரிவிக்கின்றன.
முதலில் ஜனாதிபதி தேர்தலே நடைபெறும் என்று ஆரம்பத்தில் கூறப்பட்ட போதும், தற்போதைய அரசியல் சூழ்நிலைகளால் பொதுத் தேர்தலை நடத்துவதற்கு ஜனாதிபதி திட்டமிடுவதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
இதன்படி ஜனவரி மாதத்திற்குள் பாராளுமன்றம் கலைக்கப்பட வாய்ப்பு உள்ளதாக அரசியல் தகவல்கள் தெரிவிக்கின்றன.
தற்போதைய பாராளுமன்றத்தின் பதவிக்காலம் 2025 ஆகஸ்ட் மாதத்திலேயே நிறைவடையவுள்ள போதும், தற்போதைய அரசியல் சூழ்நிலைகளை கருத்திற்கொண்டு ஒரு வருடத்திற்கு முன்னரே அதனை கலைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படலாம் என்று கூறப்படுகின்றது.
பாராளுமன்றத்தை கலைத்து தேர்தலுக்கு செல்வது தொடர்பில் அவருக்கு நெருக்கமான சிலர் யோசனைகளை முன்வைத்துள்ளதாகவும், இது குறித்து கலந்துரையாடல்களில் அரசியல் முக்கியஸ்தர்கள் ஈடுபட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.