June 15, 2025 19:02:36

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

பாடசாலை விடுமுறை காலம் தொடர்பான அறிவித்தல்!

நாட்டிலுள்ள அனைத்து அரச பாடசாலைகளுக்கும் டிசம்பர் 23ஆம் திகதி முதல் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி பாடசாலைகள் மீண்டும் 2024 பெப்ரவரி முதலாம் திகதி ஆரம்பமாகும் என்று கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.

ஜனவரி மாதத்தில் க.பொ.த உயர்தரப் பரீட்சை நடைபெறுவதால் பாடசாலைகள் பெப்ரவரி மாதத்திலேயே திறக்கப்படவுள்ளது.
அரசு மற்றும் அரசு சார் பாடசாலைகளுக்கு நாளை வெள்ளிக்கிழமை (22ஆம் திகதி) முதல் எதிர்வரும் பெப்ரவரி 01ஆம் திகதிவரை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய மூன்றாம் தவணையின் இரண்டாம் கட்டம் பெப்ரவரி 01ஆம் திகதி ஆரம்பமாகி பெப்ரவரி 18ஆம் திகதிவரை இடம்பெறும்.
தொடர்ந்து பெப்ரவரி 19ஆம் திகதிமுதல் புதிய தவணை ஆரம்பிக்கப்படும் எனவும் கல்வி அறிவித்துள்ளது.