
2022 ஆம் ஆண்டுக்கான க.பொ.த சாதாரணதர பரீட்சை பெறுபேறுகள் இன்னும் இரண்டு – மூன்று நாட்களில் வெளியிடப்படும் என கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இன்று இடம்பெற்ற நிகழ்வொன்றின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்துரைக்கும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
பரீட்சை பெறுபேற்றை வெளியிடுவதில் காணப்படும் தாமதம் குறித்து எழுப்பப்பட்ட கேள்விகளுக்கே அவர் இவ்வாறு பதிலளித்து கூறியுள்ளார்.
மேலும், 2023 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத்தராதர சாதாரணதர பரீட்சையினை 2024 ஆம் ஆண்டு மே அல்லது ஜூன் மாதம் நடத்த நடவடிக்கை எடுக்கவுள்ளதாகவும் கல்வி அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.