April 11, 2025 21:39:15

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

இலங்கை கடலுக்குள் அத்துமீறிய பெருமளவான இந்திய மீனவர்கள் கைது!

இலங்கை கடற்பரப்புக்குள் அத்துமீறி மீன்பிடித்த குற்றசாட்டில் இந்திய மீனவர்கள் 37 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை இலங்கை கடற்படையினரால் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பு நடவடிக்கையின் போது இவர்கள் கைதாகியுள்ளனர்.

இவ்வாறாக தலைமன்னார் கடற்பரப்பில் வைத்து ராமேஸ்வரத்தை சேர்ந்த 23 மீனவர்கள் 3 படகுகளுடன் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மேலும் நெடுந்தீவு கடற்பரப்பில் மீன்பிடித்துக்கொண்டிருந்த ராமேஸ்வரத்தைச் சேர்ந்த 14 மீனவர்கள் 2 படகுகளுடன் கைதாகியுள்ளனர்.

இந்நிலையில், கடந்த 14ஆம் திகதியில் இருந்து 60க்கும் மேற்பட்ட மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் கைதாகியுள்ளார்.

இலங்கை கடற்பரப்பில் சீன ஆய்வுக் கப்பல் நங்கூரமிட்டுள்ள நிலையில் இலங்கை கடற்படையினர் நாட்டின் கடல் பகுதியில் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.