
இலங்கையில் நிலவும் சீரற்ற காலநிலையால் மாத்தறை மற்றும் காலி மாவட்டங்களில் பல பிரதேசங்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன.
இந்நிலையில் மழை நிலைமை தொடருமாக இருந்தால் இந்த மாவட்டங்களில் வெள்ள அனர்த்தம் அதிகரிக்கலாம் என்றும் இதனால் தாழ்நில பிரதேசங்களில் வசிப்போரை பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறும் அனர்த்த முகாமைத்துவ நிலையம் அறிவித்துள்ளது.
இதேவேளை மாத்தறை மற்றும் காலி மாவட்டங்களில் நிலவும் அனர்த்த நிலைமைகளை கருத்திற்கொண்டு அந்த மாவட்டங்களின் அனைத்து பாடசாலைகளுக்கும் 9 மற்றும் 10 ஆம் திகதிகளில் விடுமுறை வழங்குவதற்கு கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளது.