May 4, 2025 12:23:32

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

உயர்தரப் பரீட்சை தொடர்பில் கல்வி அமைச்சரின் அறிவித்தல்!

2023ஆம் ஆண்டின் க.பொ.த உயர்தரப் பரீட்சை தொடர்பில் எதிர்வரும் நாட்களில் பரீட்சைகள் திணைக்களம் உத்தியோகபூர்வ அறிவித்தலை வெளியிடும் என்று கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.

உயர்தரப் பரீட்சையை ஒத்தி வைக்குமாறு விடுக்கப்படும் கோரிக்கைகள் தொடர்பில் பாராளுமன்றத்தில் உறுப்பினர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கையிலேயே கல்வி அமைச்சர் இதனை கூறியுள்ளார்.

பரீட்சையை நவம்பர் 27ஆம் திகதியை குறிப்பிட்டிருந்தோம். ஆனால் அதனை ஒத்தி வைக்கும் நிலை ஏற்படும். இதன்படி பரீட்சைகள் திணைக்களம் இது தொடர்பான தீர்மானத்தை எதிர்வரும் நாட்களில் அறிவிக்கும் என்று அவர் தெரிவித்துள்ளார்.