June 12, 2025 16:31:35

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

உள்ளூராட்சி தேர்தல் வேட்பு மனுக்களை இரத்துச் செய்ய முடிவு!

உள்ளூராட்சி தேர்தலுக்கான வேட்பு மனுக்களை இரத்துச் செய்ய பாராளுமன்றத்தில் நடைபெற்ற துறைசார் அமைச்சின் ஆலோசனை குழு கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இந்த வருடம் மார்ச் 10 ஆம் திகதி தேர்தலை நடத்துவதற்காக கடந்த ஜனவரி மாதத்தில் வேட்பு மனுக்கள் கோரப்பட்ட போதும், பொருளாதார சிக்கல்கள் காரணமாக தேர்தலுக்கான நிதி ஒதுக்கப்படாமையினால் தேர்தல் காலவரையின்றி ஒத்திவைக்கப்பட்டது.

இவ்வாறான நிலைமையில் வேட்பு மனுக்களை இரத்துச் செய்வதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளதுடன், இது தொடர்பில் விரைவில் பாராளுமன்றத்திற்கு அறிவிக்கப்படவுள்ளது.