June 13, 2025 4:16:35

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

உயர்தரப் பரீட்சை ஒத்திவைக்கப்படுமா? – சபையில் அமைச்சர் பதில்!

இந்த வருடத்திற்கான க.பொ.த உயர்தரப் பரீட்சையை ஒத்திவைக்குமாறு எதிர்க்கட்சிகள் கோரிக்கை விடுத்து வருகின்றன.

கடந்த வருடத்திற்கான உயர்தரப் பரீட்சை பெறுபேறுகள் அண்மையில் வெளியாகிய நிலையில், எதிர்வரும் நவம்பர் மாதத்தில் 2023ஆம் ஆண்டுக்கான பரீட்சையை நடத்துவது இரண்டாவது தடவையாக பரீட்சையில் தோற்ற எதிர்பார்க்கும் மாணவர்களுக்கு அநீதியாகும் என்றும், இதனால் பரீட்சையை எதிர்வரும் ஜனவரி மாதம் வரையில் ஒத்தி வைக்க வேண்டும் என்று பாராளுமன்றத்தில் இன்று எதிர்க்கட்சிகள் கோரிக்கை விடுத்தன.

இதன்போது பதிலளித்த கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த, பரீட்சையை ஒத்திவைக்குமாறு விடுக்கப்படும் கோரிக்கைகள் தொடர்பில் பரீட்சைகள் திணைக்களத்திற்கு அறிவித்துள்ளதாகவும், இது குறித்து திணைக்களம் ஆராய்ந்து விரைவில் பதிலளிக்கும் என்றும் தெரிவித்துள்ளார்.