June 13, 2025 15:26:20

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

தாதியர் பயிற்சிக்கு விண்ணப்பம் கோரல்!

தாதியர் பயிற்சி கற்கைநெறிக்காக 3500 பேரை இணைத்துக்கொள்வதற்கு சுகாதார அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது.

இதன்படி 2019 மற்றும் 2020 ஆம் ஆண்டுகளில் உயர்தரப் பரீட்சைகளில் உயிரியல் விஞ்ஞானப் பிரிவு அல்லது பௌதீக விஞ்ஞான பிரிவில் சித்தியடைந்த மாணவர்களுக்கு விண்ணப்பிக்க முடியும்.

இம்மாதம் 15ஆம் திகதி முதல் ஒக்டோபர் 18 ஆம் திகதி வரையில் ஒன்லைன் முறையில் விண்ணப்பிக்க முடியும் என்று சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.

இது தொடர்பான மேலதிக விபரங்களை செப்டம்பர் 15ஆம் திகதி வெளியாகும் வர்த்தமானியிலும் www.health.gov.lk என்ற சுகாதார அமைச்சின் இணையத்தளத்திலும் பெற்றுகொள்ள முடியும்.