May 20, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

மாணவர்களுக்கு அநீதி: உயர்தரப் பரீட்சை குறித்து சஜித்தின் கோரிக்கை!

எதிர்வரும் நவம்பர் மாதத்தில் நடத்த திட்டமிடப்பட்டுள்ள 2023ம் ஆண்டுக்கான உயர்தரப் பரீட்சையை ஒத்தி வைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

2022ஆம் ஆண்டு பரீட்சை பெறுபேறுகளை வெளியிடுவதில் ஏற்பட்டுள்ள தாமதம் காரணமாக இரண்டாவது தடவையாக பரீட்சைக்கு தோற்ற எதிர்பார்க்கும் மாணவர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என்றும், இதனால் பரீட்சையை ஒத்தி வைக்க வேண்டும் என்று எதிர்க்கட்சித் தலைவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

குறிப்பாக நவம்பர் மாதத்தில் பரீட்சையை திட்டமிடுவதால், இரண்டாவது தடவையாக பரீட்சைக்குத் தயாராகும் மாணவர்கள் பரீட்சைக்குத் தயாராவதற்கு இரண்டு மாதங்களுக்கும் குறைவான கால அவகாசமே கிடைக்கும் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதேவேளை உயர்தரப் பரீட்சையை ஒத்தி வைப்பதற்கு இதுவரையில் திட்டமிடப்படவில்லை என்று கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த சில தினங்களுக்கு முன்னர் தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.