June 14, 2025 21:11:04

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

மீண்டும் மின்வெட்டு அமுலாகும்?

இலங்கையில் பல மாவட்டங்களில் நிலவும் வறட்சியுடன் கூடிய காலநிலையால் சில மாவட்டங்களில் மின்வெட்டை அமுல்படுத்த நேரிடலாம் என்று மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.

தற்போதைய நிலைமையில் தென் மாகாணத்திலுள்ள சமனலாவ நீர்த்தேக்கத்திலிருந்து விவசாயப் பணிகளுக்காக நீர் திறந்து விடப்பட்டால், இவ்வாறு மின் தடை ஏற்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதனால் காலி, மாத்தறை, ஹம்பாந்தோட்டை, கேகாலை, இரத்தினபுரி ஆகிய மாவட்டங்களுக்கு இவ்வாறு மின்வெட்டை அமுல்படுத்த வேண்டியேற்படலாம் என்றும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.