June 11, 2025 20:09:46

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

”ரணிலுக்கு ஒஸ்கார் விருது கிடைக்கலாம்”

சிறந்த நடிகர்களுக்கான ஒஸ்கார் விருது அடுத்தமுறை இலங்கை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு வழங்கப்படலாம் என்று முன்னாள் அமைச்சர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி தலைமையில் நேற்று மாலை நடைபெற்ற சர்வகட்சி கூட்டத்தின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து கூறும் போதே கம்மன்பில இவ்வாறு கூறியுள்ளார்.

தமிழ் மக்களின் வாக்குகளை பெற்றுக்கொள்ளும் நோக்கில் தமிழ்க் கட்சிகளை ஏமாற்றுவதற்காக 13 ஆவது அரசியலமைப்பு திருத்தம் தொடர்பாக கதைத்து ரணில் விக்கிரமசிங்க நடிக்கின்றார் என்று கம்மன்பில இதன்போது தெரிவித்துள்ளார்.

சிங்கள மக்களின் வாக்குகளை ராஜபக்‌ஷக்களின் ஊடாகவும், தமிழ் மக்களின் வாக்குகளை தமிழ்க் கட்சிகளின் ஊடாக பெற்றுக்கொள்ளும் முயற்சியே இதில் நடக்கின்றது. இதன்படி அடுத்த முறை சிறந்த நடிகருக்கான ஒஸ்கார் விருது ரணில் விக்கிரமசிங்கவுக்கு கிடைக்கலாம் என்று குறிப்பிட்டுள்ளார்.