February 28, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

மார்ச் முதலாம் திகதி நாடு முடங்குமா?

அரசாங்கத்தின் புதிய வரிக்கொள்கைத் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து தொழிற்சங்கங்கள் மார்ச் முதலாம் திகதி இலங்கை முழுவதும் வேலைநிறுத்தப் போராட்டத்தை முன்னெடுப்பதற்கு திட்டமிட்டுள்ளன.

திட்டமிட்டப்படி இந்தப் போராட்டம் நடக்கும் என்று தொழில் வல்லுநர்களின் தொழிற்சங்க கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.

இதன்படி மார்ச் முதலாம் திகதி சுகாதாரம், கல்வி, எரிபொருள், துறைமுகம், மின்சார துறைகளை சேர்ந்த தொழிற்சங்கங்கள் இந்த போராட்டத்தில் கலந்துகொள்ளவுள்ளன.

இதன்போது தொழிற்சங்க உறுப்பினர்கள் பணிபகிஷ்கரிப்பில் ஈடுபடவுள்ளதுடன் கொழும்பில் ஆர்ப்பாட்டப் பேரணியை நடத்தவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனால் மார்ச் முதலாம் திகதி அரச துறைகள் முழுமையாக முடங்கலாம் என்று தெரிவிக்கப்படுகின்றது.