February 28, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

ஜே.வி.பியின் பேரணி பொலிஸாரால் கலைக்கப்பட்டது!

ஜே.வி.பியினர் கொழும்பில் இன்று நடத்திய ஆர்ப்பாட்டப் பேரணி மீது பொலிஸார் கண்ணீர் புகை மற்றும் நீர்த்தாரை பிரயோகங்களை மேற்கொண்டுள்ளனர்.

நீதிமன்றத்தினால் ஜே.வி.பியை சேர்ந்தவர்களுக்கு இன்றைய தினத்தில் கொழும்பில் சில இடங்களுக்கு செல்வதற்கு தடை விதிக்கப்பட்டிருந்தது.

இவ்வாறான நிலைமையில் அவர்கள் விகாரமாதேவி பூங்காவுக்கு அருகில் இருந்து புறக்கோட்டை நோக்கி பேரணியை நடத்திய போது, இடையே அவர்களை மறித்த பொலிஸார் நீர்த்தாரை மற்றும் கண்ணீர் புகை தாக்குதல்களை நடத்தி பேரணியை கலைத்துள்ளனர்.