February 25, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

”தேர்தலை நடத்துவதில் சிக்கல்”: உயர்நீதிமன்றத்திற்கு அறிவிப்பு!

திட்டமிட்டவாறு மார்ச் 9 ஆம் திகதி உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தலை நடத்த முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு, உயர்நீதிமன்றத்திற்கு அறிவித்துள்ளது.

தேர்தலை நடத்துவதற்கு தேவையான நிதியை திறைசேரி வழங்காமையினால் இந்த நிலைமை ஏற்பட்டுள்ளதாக ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது.

உயர்நீதிமன்றத்திற்கு நகர்த்தல் பத்திரம் ஒன்றை தாக்கல் செய்து தேர்தல் ஆணைக்குழு இதனை அறிவித்துள்ளது.

மார்ச் 9ஆம் திகதி தேர்தல நடத்த முடியும் என்று முன்னர் நீதிமன்றத்தில் தாம் உறுதியளித்திருந்தாலும், அதற்கு பல்வேறு தடைகள் ஏற்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு உயர்நீதிமன்றத்திற்கு அறிவித்துள்ளது.