April 17, 2025 5:40:54

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

ஆடை விலைகள் பெருமளவில் உயர்வு!

மின்கட்டணத்தை அதிகரிப்பதற்கு இலங்கை மின்சார சபை நடவடிக்கை எடுத்துள்ள நிலையில், ஆடை விலைகளை உயர்த்துவதற்கு ஆடை உற்பத்தியாளர்கள் சங்கம் தீர்மானித்துள்ளது.

இதன்படி உள்நாட்டில் தைக்கப்படும் ஆடைகளின் விலைகள் 20 வீதத்தால் உயர்வடையும் என்று ஆடை உற்பத்தியாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது.

மின் கட்டண அதிகரிக்கப்படுவதால் ஆடை உற்பத்தி துறை பெரும் பாதிப்பை எதிர்நோக்கும் எனவும், இதனால் தைத்து முடிக்கப்படும் ஆடைகளின் விலைகளை அதிகரிக்காது இருக்க முடியாது என்று அந்த சங்கத்தினர் தெரிவித்துள்ளனர்.