February 23, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

இலங்கையில் கொரோனா : உயிரிழந்தோர் எண்ணிக்கை 23 ஆக அதிகரிப்பு!

கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட மேலும் இருவர் உயிரிழந்துள்ளனர்.

இதன்படி இலங்கையில் கொரோனா வைரஸால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 23 ஆக அதிகரித்துள்ளது.

கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்றுவந்த 61 மற்றும் 68 வயதுடைய பெண்கள் இருவரே உயிரிழந்துள்ளதாக கொவிட் தடுப்புப் பிரிவு தெரிவித்துள்ளது.

இவர்கள் கொட்டாஞ்சேனை மற்றும் கிரேண்ட்பாஸ் பிரதேசங்களை சேர்ந்தவர்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கு முன்னர், 22 ஆவது கொரோனா உயிரிழப்பு பாணந்துறை வைத்தியசாலையில் பதிவாகியுள்ளதாக நேற்று முற்பகல் அரசாங்க தகவல் திணைக்களத்தினால் அறிவிக்கப்பட்டிருந்த போதும், குறித்த உயிரிழப்பு தற்கொலையால் ஏற்பட்டது என்பதால், பின்னர் கொரோனா உயிரிழப்பு எண்ணிக்கை பட்டியலில் இருந்து அதனை நீக்கிக் கொள்ளத் தீர்மானிக்கப்பட்டது.

இதற்கமைய நேற்று வரையில் 21 உயிரிழப்புகள் பதிவாகியிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.