February 23, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

பிரபாகரன் உயிருடன் இருப்பதாக கூறுகிறார் நெடுமாறன்!

தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் உயிருடன் நலமாக இருப்பதாக உலகத் தமிழர் பேரமைப்பு தலைவர் பழ. நெடுமாறன் தெரிவித்துள்ளார்.

தஞ்சாவூர் முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்தில் இன்று முற்பகல் நடத்தப்பட்ட செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனை தெரிவித்துள்ளார்.

”பிரபாகரனுடன் தொடர்பில்தான் உள்ளோம். பிரபாகரனின் அனுமதியின் பேரிலேயே செய்தியாளர்கள் சந்திப்பு நடைபெறுகிறது. பிரபாகரனின் மனைவி, மகளும் நலமுடன் உள்ளனர். உரிய நேரத்தில் மக்கள் முன் வருவார். பிரபாகரன் எங்கு உள்ளார் என்பது தற்போது அறிவிக்க இயலாது. தமிழக அரசும், மக்களும் பிரபாகரனுக்கு உறுதுணையாக இருக்க வேண்டும்” என்று நெடுமாரன் குறிப்பிட்டுள்ளார்.

இந்த செய்தியாளர்கள் சந்திப்பின்போது கவிஞர் காசி ஆனந்தன், உலகத் தமிழர் பேரமைப்பு துணைத் தலைவர் அய்யனாபுரம் சி. முருகேசன் ஆகியோரும் அங்கிருந்தனர்.