June 11, 2025 21:57:00

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

பாராளுமன்ற உறுப்பினராக பௌசி பதவியேற்றார்!

ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினராக ஏ.எச்.எம்.பௌசி பதவியேற்றார்.

பாராளுமன்றத்தில் இன்று சபாநாயகர் மகிந்த யாப்பா முன்னிலையில் அவர் பதவியேற்றார்.

தான் கொழும்பு மாநகர சபைக்கான தேர்தலில் ஐக்கிய மக்கள் சக்தியின் மேயர் வேட்பாளராக போட்டியிடுவதால் முஜிபூர் ரஹ்மான் பாராளுமன்ற உறுப்பினர் பதவியில் இருந்து விலகினார்.

இதனை தொடர்ந்து அவரின் பாராளுமன்ற ஆசனம் வெற்றிடமானதால் அந்த ஆசனத்திற்கு ஏ.எச்.எம்.பௌசியின் பெயரை ஜனவரி 25 ஆம் திகதி தேர்தல்கள் ஆணைக்குழு வர்த்தமானியில் வெளியிட்டது.

இதன்படி இன்று அவர் மீண்டும் பாராளுமன்ற உறுப்பினராக பதவியேற்றார். .
2020 பொதுத் தேர்தலில் ஐக்கிய மக்கள் சக்தியில் கொழும்பு மாவட்டத்தில் போட்டியிட்ட பௌசி 48,701 வாக்குகளை பெற்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.