February 23, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

அரச நிறுவனங்களில் ஊழியர் குறைப்பு!

சகல அரச நிறுவனங்களிலும் தற்போது ஊழியர்களின் எண்ணிக்கையை குறைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சரவை பேச்சாளரான அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.

அமைச்சுகள் மற்றும் அரச நிறுவனங்களில் செலவு கட்டுப்பாடுகளை விதித்து வெளியிடப்பட்டுள்ள சுற்றுநிருபத்திற்கு அமைய இந்த நடவடிக்கை எடுக்கப்படுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதன்படி சிறப்பாக செயற்படாத ஊழியர்களை தானாகவே ஓய்வு பெறக்கூடியவாறு முறைமை தயாரிக்கப்படுகின்றதாகவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை அரச நிறுவனங்களில் தற்போது பணியாற்றும் பட்டதாரிகள் பலரை ஆசிரியர் சேவையில் இணைத்துக்கொள்ளவும் வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்படுவதாகவும் பந்துல குணவர்தன குறிப்பிட்டுள்ளார்.