February 24, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

வங்கி ஏ.டி.எம் இயந்திரத்தை தூக்கிச் சென்ற கொள்ளையர்கள்!

கம்பளை பிரதேசத்தில் தனியார் வங்கியொன்றின் ஏ.டி.எம் இயந்திரத்தை கொள்ளையர்கள் குழுவொன்று அகற்றி சென்றுள்ளனர்.

செவ்வாய்க்கிழமை நள்ளிரவு இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

வானொன்றில் முகமூடி அணிந்து வந்த குழுவொன்று, வங்கியில் இருந்த காவலாளியை கட்டி வைத்துவிட்டு, ஏ.டி.எம். இயந்திரத்தை இரும்பு ஆயுதங்களால் அகற்றி எடுத்துச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்நிலையில் கொள்ளையர்கள் பயணித்ததாக கூறப்படும் வான், பேராதனை பகுதியில் இருந்து மீட்கப்பட்டுள்ளதாகவும், அதன் சாரதி வானுக்குள் கட்டி வைக்கப்பட்டிருந்தாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

சம்பவம் தொடர்பில் கம்பளை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.