February 23, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

13ஐ செயற்படுத்துமாறு இலங்கைக்கு இந்தியா வலியுறுத்தல்!

13 ஆவது அரசியலமைப்பு திருத்தத்தை செயற்படுத்தி மாகாண சபைகள் தேர்தலை நடத்துமாறு இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.ஜெயசங்கர், இலங்கை அரசாங்கத்தை வலியுறுத்தியுள்ளார்.

இலங்கை – இந்திய வெளிவிவகார அமைச்சர்கள் இணைந்து இன்று கொழும்பில் நடத்திய செய்தியாளர் சந்திப்பின் போதே அவர் இது தொடர்பில் கூறியுள்ளார்.

இந்த செய்தியாளர் சந்திப்பில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவும் கலந்துகொண்டிருந்தார்.

இதன்போது இலங்கைக்கு தேவையான ஒத்துழைப்புகளை வழங்குவதற்கு இந்திய அரசாங்கம் தயாராக இருப்பதாகவும் ஜெய்சங்கர் கூறியுள்ளார்.