June 13, 2025 19:56:38

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

கியூஆர் முறையை பின்பற்றாத நிரப்பு நிலையங்களுக்கு சிக்கல்!

எரிபொருள் விநியோகத்திற்கான கியூஆர் முறைமையை கடுமையாக நடைமுறைப்படுத்த இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் தீர்மானித்துள்ளது.

இதன்படி கியூஆர் முறைமையை பின்பற்றாத எரிபொருள் நிரப்பு நிலையங்கள் பலவற்றின் சேவைகளை இடைநிறுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

பெட்ரோலிய கூட்டுத்தாபனம் மற்றும் இலங்கை பெட்ரோலிய கூட்டுத்தாபன களஞ்சியசாலை அதிகாரிகளுக்கிடையில் இடம்பெற்ற மீளாய்வுக் கூட்டத்தின் போது இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

இதன்போது, எரிபொருள் முன்பதிவு மற்றும் விநியோகம் தொடர்பில் கலந்துரையாடப்பட்டுள்ளது.

எவ்வாறாயினும் நாட்டில் தேவையான அளவு எரிபொருள் உள்ளது என்றும், இது தொடர்பில் அச்சமடையத் தேவையில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.