March 3, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

”கட்டணத்தை அதிகரிக்காவிட்டால் நாடு இருளில் மூழ்கும்”: எச்சரிக்கும் அமைச்சர்!

மின் கட்டணத்தை கட்டாயம் அதிகரிக்க வேண்டும் என்று மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.

பாராளுமன்றத்தில் இன்று அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

தற்போதைய நெருக்கடி நிலைமயில் அடுத்த வருடத்தில் மின்கட்டணத்தை அதிகரித்தே ஆகவேண்டும் என்று அமைச்சர் கூறியுள்ளார்.

அவ்வாறு கட்டணத்தை அதிகாரிக்க நடவடிக்கை எடுக்காவிட்டால் அடுத்த வருடத்தில் 6 அல்லது 8 மணித்தியாலங்கள் மின் துண்டிப்பை செய்ய நேரிடும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.