March 2, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

மின்வெட்டு நேரம் அதிகரிக்கப்படுமா?

Electricity Power Common Image

தற்போது நாட்டில் தினசரி அமுல்படுத்தப்பட்டு வரும் மின்வெட்டு நேரம் மேலும் அதிகரிக்கப்படலாம் என்று இலங்கை மின்சார சபை பொறியியலாளர் சங்கம் தெரிவித்துள்ளது.

எரிபொருள் மற்றும் நிலக்கரி தொடர்பான நெருக்கடிகளால் மின்சார உற்பத்திக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக அந்த சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.

தற்போதைய நிலைமையில் போதுமான எரிபொருள் கிடைக்காது போகுமாக இருந்தால் மின்வெட்டு நேரம் அதிகரிக்க வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இது தொடர்பில் மின்சார சபை அதிகாரிகள் ஆராய்ந்து வருவதாக கூறப்படுகின்றது.