June 15, 2025 4:07:08

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

இலங்கையில் மேலும் சில பகுதிகள் தனிமைப்படுத்தப்பட்டன

கேகாலை மாவட்டத்தின் மாவனெல்ல, ஹெம்மாத்தகம, புளத்கொஹூபிட்டிய பொலிஸ் அதிகாரப் பிரிவுகள் உடன் அமுலுக்கு வரும் வகையில் தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளாக அறிவிக்கப்பட்டுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

மேலும் கலிகமுவ பிரதேச சபைக்கு உட்பட்ட பகுதிகளும் குருநாகல் மாவட்டத்தின் கிரிஉல்ல பொலிஸ் அதிகாரப் பகுதிகளும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.