March 4, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

ஹிருணிகா உள்ளிட்ட 15 பேர் கைது!

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா பிரேமசந்திர உள்ளிட்ட 15 பெண்கள் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கொழும்பு – கறுவாத்தோட்டம் பொலிஸாரால் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பெண்களுக்கு எதிரான வன்முறைகளை ஒழிப்பதற்கான சர்வதேச தினத்தை முன்னிட்டு கொழும்பில் நடத்தப்பட்ட ஆர்ப்பாட்ட பேரணியை தொடர்ந்து இவர்கள் கைகது செய்யப்பட்டள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

ஐக்கிய மக்கள் சக்தியின் மகளிர் அமைப்பை சேர்ந்த இவர்கள் கொழும்பு சுதந்திர சதுக்கத்தில் இருந்து ஐ.நா அலுவலகம் வரை ஆர்ப்பாட்ட பேரணியை நடத்திய போது, இடையில் இவர்களை பொலிஸார் தடுத்து நிறுத்தியுள்ளதாக கூறப்படுகின்றது.

இதனை தொடர்ந்தே இவர்கள் கைதாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.