June 14, 2025 8:26:45

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

குரங்கு அம்மை: தயார் நிலையில் இலங்கை சுகாதாரத் துறை!

File Photo

இலங்கையில் குரங்கு அம்மை தொற்றுடன் இருவர் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில், அந்தத் தொற்று நாட்டில் பரவுதை தடுப்பதற்காக பல்வேறு வேலைத்திட்டங்களை முன்னெடுத்துள்ளதாக சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.

அவ்வாறு தொற்றுப் பரவல் ஏற்படுமாக இருந்தால் அதனை எதிர்கொள்ள அனைத்து பிரிவுகளும் தயார் நிலையில் உள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

தொற்றுக்குள்ளானவர்களுக்கான சிகிச்சைகளை வழங்குவதற்காக தேவைப்படும் மருந்துகள் போதுமான அளவு கையிருப்பில் உள்ளதாக அமைச்சின் செயலாளர் ஜனக்க சந்திரகுப்த தெரிவித்துள்ளார்.

அண்மையில் துபாயில் இருந்து வந்த இருவருக்கு அந்த தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது. இவர்கள் கொழும்பு ஐடிஎச் வைத்தியசாலையில் தற்போது சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.