March 4, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

இலங்கை முழுவதும் சிவப்பு எச்சரிக்கை!

இலங்கையைச் சூழவுள்ள பகுதிகளில் கீழ் வளிமண்டலத் தளம்பல் நிலை விருத்தியடைந்து வருவதால் இலங்கை முழுவதும் பலத்த மழையுடன் கூடிய காலநிலை நிலவும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி நாடு முழுவதும் சிவப்பு எச்சரிக்கை அறிவித்தலை விடுத்துள்ள வளிமண்டலவியல் திணைக்களம், இதனால் ஏற்படக் கூடிய அனர்த்தங்கள் குறித்து எச்சரிக்கையாக இருக்குமாறு கேட்டுக்கொண்டுள்ளது.

எதிர்வரும் மணித்தியாலங்களில் சில இடங்களில் 150 மில்லி மீட்டருக்கும் அதிக மழை வீழ்ச்சி பதிவாகலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் வடக்கு, மத்திய மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி, மாத்தறை மற்றும் களுத்துறை மாவட்டங்களிலும் 100 மில்லி மீட்டர் வரையிலான பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது.