June 12, 2025 6:22:26

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

பல இடங்களில் வெள்ளம்: மண்சரிவில் இருவர் மரணம்!

இலங்கையின் பல பகுதிகளிலும் தொடரும் மழையுடன் கூடிய காலநிலையால் பல இடங்களில் வெள்ளம் மற்றும் மண்சரிவு அனர்த்தங்கள் ஏற்பட்டுள்ளன.

களனி, களுகங்கை ஆகிய ஆறுகளின் நீர்மட்டங்கள் உயர்வடைவதால் தாழ்நில பிரதேசங்களில் வெள்ளம் ஏற்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

இதேவேளை கேகாலை மாவட்டத்தின் வரக்காபொல – தும்பலியத்த பிரதேசத்தில் இரண்டு மாடி வீடொன்றின் மீது மண்மேடு சரிந்து விழுந்ததில் இருவர் உயிரிழந்துள்ளனர்.

வெள்ளிக்கிழமை மாலை இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
இந்த சம்பவத்தின் போது குறித்த வீட்டில் வசித்த 47 வயது தாயும், 24 வயது மகனும் மண்ணில் புதையுண்டு உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.