June 17, 2025 18:08:53

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

யாழ். – சென்னை விமான சேவைகள் விரைவில்!

யாழ்ப்பாணம் பலாலி விமான நிலையத்தில் இருந்து சென்னைக்கான விமான சேவைகளை விரைவில் ஆரம்பிக்க எதிர்பார்த்துள்ளதாக இலங்கை சிவில் விமான சேவை தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதன்படி ஒக்டோபர் இறுதியில் இந்த விமான சேவைகளை மீள ஆரம்பிப்பதற்கான ஏற்பாடுகள் முன்னெடுக்கப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.

இது தொடர்பில் இந்திய விமான நிறுவனத்துடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுள்ளதாகவும், இதன்போது இருந்து விமான நிலையங்களுக்கும் இடையே விமான போக்குவரத்தை மீள ஆரம்பிக்க இணக்கப்பாடுகள் எட்டப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகின்றது.

முன்னர் கடந்த ஜூலை முதலாம் திகதி முதல் பலாலி விமான நிலையத்தின் செயற்பாடுகள் மீள ஆரம்பிக்க எதிர்பார்த்திருந்த போதும், சில காரணங்களினால் அந்த நடவடிக்கைகள் பிற்போடப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.