
இலங்கை வரலாற்றில் அதிகபட்ச பணவீக்கம் கடந்த ஆகஸ்ட் மாதம் பதிவாகியுள்ளது.
தொகைமதிப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களம் இது தொடர்பில் அறிக்கை வெளியிட்டுள்ளது.
குறித்த அறிக்கையின் பிரகாரம், ஆகஸ்ட் மாதத்தில் பணவீக்கம் 70.7 வீதமாகவும், உணவு பணவீக்கம் 84.9 வீதமாகவும் பதிவாகியுள்ளது.
இதில் கொழும்பு உள்ளிட்ட நெரிசல் மிக்க பிரதேசங்களில் பண வீக்கம் 94 வீதமாக உயர்வடைந்துள்ளது.
இந்நிலையில், கொழும்பு உள்ளிட்ட சனநெரிசல் மிக்க பிரதேசங்களில் உணவுப் பணவீக்கம் இந்த மாத இறுதியில் நூறு வீதமாக உயரலாம் என்று எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினரும், பொருளாதார நிபுணருமான ஹர்ஷ டி சில்வா தெரிவித்துள்ளார்.