June 13, 2025 7:16:25

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

மீண்டும் போராடத்திற்கு தயாராகும் ஆசிரியர் சங்கங்கள்!

File photo
சம்பள அதிகரிப்பு கோரி மீண்டும் போராட்டத்தில் குதிப்பதற்கு ஆசிரியர் சங்கங்கள் திட்டமிடுவதாக தெரிவிக்கப்படுகின்றது.
தற்போதைய பொருளாதார நெருக்கடியில் ஆசிரியர்களுக்கு போதுமான சம்பளம் கிடைக்கவில்லை என்று  இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
இதனால் எதிர்காலத்தில் மீண்டும் போராட்டத்தை நடத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்படலாம் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
பொருளாதார நெருக்கடிக்குள் நாட்டை தள்ளிவிட்ட அரசியல்வாதிகள் தற்போது மக்களின் வரிப்பணத்தில் சுகபோகம் அனுபவித்துக்கொண்டு மக்களின் வாழும் உரிமையை பறித்து வருவதாகவும் ஜோசப் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.