
ஆசியக் கிண்ணத்தை வென்ற இலங்கை கிரிக்கெட் அணியினருக்கு கட்டுநாயக்க விமான நிலையத்தில் இருந்து ரசிகர்கள் விசேட வரவேற்பளித்தனர்.
இன்று காலை 5.30 மணியளவில் இலங்கை அணியினர் நாடு திரும்பினர்.
இதன்போது விமான நிலையத்தில் விமான நிலைய ஊழியர்கள் அவர்களை வரவேற்றனர்.
பின்னர் வீரர்கள், அங்கிருந்து விசேட பஸ் மூலம் இலங்கை கிரிக்கெட் நிறுவனம் நோக்கி பயணித்தனர்.
இவ்வேளையில் ரசிகர்கள் வீதிகளின் இருபக்கத்தில் இருந்தும் அவர்களுக்கு வாழ்த்துக்களை கூறி வரவேற்பளித்தனர்.
இதேவேளை ஆசியக் கிண்ணம் வென்ற இலங்கை வலைப் பந்து அணியும் இன்று நாடு திரும்பியது. அவர்களுக்கும் விமான நிலையத்தில் விசேட வரவேற்பளிக்கப்பட்டது.