May 30, 2025 4:58:28

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

கொரோனா மரணங்களின் பட்டியலில் இருந்து நீக்கப்பட்ட 22 ஆவது மரணம்

பாணந்துறை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்த 27 வயதுடையவரின் மரணத்தை கொரானாவுடன் தொடர்புடைய மரண பட்டியலில் இருந்து நீக்குவதற்கு சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் ஆய்வுப் பிரிவு தீர்மானித்துள்ளது.

அவர் தற்கொலை முயற்சியில் உயிரிழந்த பின்னர் மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர் பரிசோதனையிலேயே அவருக்கு கொரோனா தொற்றியிருப்பது உறுதி செய்யப்பட்டிருந்தது.

ஒரு தற்கொலையை கொரோனாவுடன் தொடர்புடைய மரணங்கள் பட்டியலில் இணைக்கப்பட்டமைக்கு விமர்சனங்கள் மேலெழுந்தன.

இந்நிலையில் குறித்த மரணத்தை, கொரோனா மரணங்களின் பட்டியலில் இருந்து நீக்க தொற்று நோயியல் ஆய்வுப் பிரிவு தீர்மானித்துள்ளது.

குறித்த இளைஞனின் மரணம், கொரோனா மரணங்களின் பட்டியலில் சேர்க்கப்பட்டமை, நேரடியான கொரோனா தொடர்பான மரணங்கள் மற்றும் மறைமுகமான கொரோனா  தொடர்பான மரணங்கள் என இரண்டு விதமாக வகைப்படுத்தப்பட்டுள்ள அடிப்படையிலாகும் என்று தொற்று நோயியல் ஆய்வுப் பிரிவின் தலைமை மருத்துவ நிபுணர் டாக்டர் சுதத் சமரவீர தெரிவித்திருந்ததும் குறிப்பிடத்தக்கது.