June 14, 2025 6:27:52

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

தானிஷ் அலிக்கு சிறைத் தண்டனை விதிப்பு!

ரூபவாஹிணி கூட்டுத்தாபனத்திற்குள் அத்துமீறி நுழைந்த சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த தானிஷ் அலிக்கு வேறு குற்றமொன்றில் 14 நாட்கள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

விளக்க மறியல் சிறைக்குள் கையடக்க தொலைப்பேசி பயன்படுத்திய குற்றத்திற்கே அவருக்கு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

தான் கையடக்க தொலைபேசி பயன்படுத்தியமை தொடர்பில் இன்றைய தினம் கொழும்பு மேலதிக மாவட்ட நீதிபதி முன்னிலையில்ஈ குற்றத்தை அவர் ஒப்புக்கொண்டுள்ளார்.

அதன்படி அவருக்கு 14 நாட்கள் சிறைத்தண்டனையை விதித்து நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

இதனை தொடர்ந்து அவர் விளக்க மறியல் சிறையில் இருந்து வெலிக்கடை சிறைச்சாலைக்கு மாற்றப்பட்டதாக சிறைச்சாலைகள் ஆணையாளர் தெரிவித்துள்ளார்.