October 5, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

காலிமுகத்திடல் போராட்டக் குழுவைச் சேர்ந்த ‘ரெட்டா’ கைது!

காலிமுகத்திடல் போராட்டக் குழுவைச் சேர்ந்த சமூக ஊடக செயற்பாட்டாளர் ‘ரெட்டா’ என்றழைக்கப்படும் ரதிது சேனாரட்ன குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

விசாரணையொன்றுக்காக கொழும்பு குற்றப் புலனாய்வுப் பிரிவுக்கு இன்று அழைக்கப்பட்டிருந்த அவர், இன்று மாலை கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இன்று காலை குற்றப்புலனாய்வுப் பிரிவுக்கு சென்றிருந்த இவரிடம் நீண்ட நேரம் விசாரணை நடத்தப்பட்டுள்ளது.

பின்னர் இவர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், இவரை நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

ஏற்கனவே கடந்த மே மாதத்தில் கொழும்பு கோட்டை நீதிமன்றத்திற்கு முன்னால் நடத்தப்பட்ட ஆர்ப்பாட்டம் தொடர்பில் கைது செய்யப்பட்டிருந்த இவர் பின்னர் பிணையில் விடுதலை செய்யப்பட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. .