May 24, 2025 12:27:12

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

இலங்கையில் மருத்துவப் பணியாளர்கள் 50 பேருக்கு கொரோனா தொற்று

இலங்கையில் மருத்துவர்கள் உள்ளிட்ட சுகாதார சேவையில் ஈடுபடும் 50 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.

கொழும்பு , களுத்துறை, கம்பஹா, திருகோணமலை, இரத்தினபுரி, கேகாலை ஆகிய மாவட்டங்களிலுள்ள மருத்துவமனைகளில் இவர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக அரச தாதிமார் சங்கத்தின் தலைவர் சமன் ரத்னப்பிரிய தெரிவித்துள்ளார்.

அக்டோபர் மாத ஆரம்பத்தில் இருந்து நாட்டில் அதிகளவான கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டு வரும் நிலையில், அவர்களுக்கு சிகிச்சையளிக்கும் மற்றும் தொற்றாளர்களை அடையாளம் காணும் நடவடிக்கைகளில் ஈடுபட்ட சுகாதார பணியாளர்களே இவ்வாறாக தொற்றுக்கு உள்ளாகியுள்ளதாக சமன் ரத்னப்பிரிய தெரிவித்துள்ளார்.

மருத்துவமனைகளில் மருத்துவர்கள், தாதிமார்களுக்கு போதுமான சுகாதார பாதுகாப்பு வசதிகள் வழங்கப்படாமையே இதற்கு காரணம் என்று அவர் தெரிவித்துள்ளார்.

இதனால் வைத்தியசாலைகளில் இவர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தத் தேவையான நடவடிக்கைளை அரசாங்கம் முன்னெடுக்க வேண்டுமென்று சமன் ரத்னப்பிரிய கோரிக்கை விடுத்துள்ளார்.