
ஜுலை 5 ஆம் திகதி நள்ளிரவு முதல் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடத் தீர்மானித்துள்ளதாக ரயில் கட்டுப்பாட்டாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது.
ரயில்வே திணைக்கள ஊழியர்களுக்கு பணிக்கு வருவதற்காக எரிபொருள் கிடைப்பதில் காணப்படும் சிக்கல்கள் காரணமாக இந்தத் தீர்மானத்தை எடுத்துள்ளதாக அந்த சங்கம் தெரிவித்துள்ளது.
இதனால் நள்ளிரவு 12 மணிக்கு பின்னர் தனிப்பட்ட வாகனங்களின் மூலம் பணிக்கு செல்ல மாட்டோம் என்று ரயில் கட்டுப்பாட்டாளர்கள் சங்கம் கூறியுள்ளது.
இதனால் ரயில் சேவைகள் நள்ளிரவு முதல் முடங்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலைமைக்கு ரயில்வே திணைக்கள அதிகாரிகளே பொறுப்பு கூற வேண்டும் என்று அந்த சங்கம் அறிக்கையொன்றை வெளியிட்டு தெரிவித்துள்ளது.