
பொருளாதார நெருக்கடியால் பாதிக்கப்பட்டுள்ள இலங்கை மக்களுக்காக தமிழக அரசினால் மேலும் நிவாரணப் பொருட்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.
நிவாரணப் பொருட்கள் அடங்கிய கப்பல் தற்போது கொழும்புத் துறைமுகத்தை வந்தடைந்துள்ள நிலையில், அவற்றில் உள்ள பொருட்கள் இந்தியத் தூதுவரினால் இலங்கைக அதிகாரிகளிடம் கையளிக்கப்பட்டுள்ளது.
குறித்த கப்பலில் 14,712 டொன் அரிசி, 250 டொன் பால்மா மற்றும் 38 டொன் அத்தியாவசிய உயிர்காக்கும் மருந்துகள் இருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.
ஏற்கனவே தமிழக அரசின் முதல் கட்ட நிவாரணப் பொருட்கள் கடந்த மாதம் இலங்கைக்கு அனுப்பி வைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
From the people of #India to the people of #SriLanka!!! High Commissioner,Hon'ble Ministers @Keheliya_R, Nalin Fernando, MPs, various dignitaries and officials welcomed a large humanitarian consignment worth more than SLR 3 billion from #Tuticorn today. (1/2) pic.twitter.com/pMOF8kJppx
— India in Sri Lanka (@IndiainSL) June 24, 2022