October 6, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

கூட்டமைப்பின் பொதுச் செயலாளராக மாவை சேனாதிராசா; பங்காளிக்கட்சிகள் முடிவு

தமிழ் தேசிய கூட்டமைப்பின் பொதுச் செயலாளராக இலங்கை தமிழ் அரசு கட்சியின் தலைவர் மாவை சேனாதிராசாவை நியமிக்க பங்காளி கட்சிகள் தீர்மானித்துள்ளன.

யாழ். மார்ட்டின் வீதியிலுள்ள இலங்கை தமிழ் அரசு கட்சி அலுவலகத்தில் இன்று நடைபெற்ற பங்காளிக் கட்சிகளின் கூட்டத்திலேயே மேற்படி தீர்மானம் எட்டப்பட்டுள்ளது.

தேர்தல்கள் திணைக்களத்தால் அண்மையில் விடுக்கப்பட்ட அறிவித்தல் ஒன்றில் கூட்டணி கட்சிகள் அனைத்தும் செயலாளர்களை அறிவிக்க வேண்டுமென கேட்டுக்கொண்டதாக இந்த கூட்டத்தில் கலந்துகொண்டிருந்த சீ.வீ.கே.சிவஞானம் அனைவரதும் கவனத்துக்கு கொண்டுவந்த நிலையிலேயே, பங்காளிக் கட்சிகள் மாவை சேனாதிராசாவை தமிழ் தேசியக் கூட்டமைப்பின் செயலாளராக நியமிப்பதற்கு தீர்மானித்தன. தலைவராக இரா.சம்பந்தன் தொடர்ந்தும் செயற்படுவார் எனவும் முடிவு எட்டப்பட்டது.

மேற்படி கூட்டத்தில் இலங்கை தமிழ் அரசு கட்சி சார்பில் மாவை சேனாதிராசா, சீ.வீ.கே.சிவஞானம், ப.சத்தியலிங்கம் ஆகியோரும், புளொட் சார்பில் த.சித்தார்த்தன், பா.கஜதீபன், க.சிவநேசன் ஆகியோரும், ரெலோ சார்பில் செல்வம் அடைக்கலநாதன், வினோ நோகராதலிங்கம் ஆகியோரும் கலந்து கொண்டிருந்தனர்.