May 30, 2025 21:00:21

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

பொலிஸ் தலைமையகம் முன்னால் மாணவர்கள் மீது கண்ணீர்ப் புகைத் தாக்குதல்!

கொழும்பில் பொலிஸ் தலைமையகத்திற்கு முன்னால் அனைத்துப் பல்கலைக்கழக மாணவர்களினால் நடத்தப்பட்ட ஆர்ப்பாட்டம் மீது பொலிஸார் கண்ணீர்ப் புகைத் தாக்குதல் நடத்தியுள்ளனர்.

காலி முகத்திடல் ஆர்ப்பாட்டம் மீது மே 9 ஆம் திகதி தாக்குதல் நடத்திய பிரதான சந்தேக நபர்களை கைது செய்யுமாறு வலியுறுத்தியே இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.

இதன்போது பொலிஸ் தலைமையகத்திற்குள் நுழைய முடியாதவாறு போடப்பட்டிருந்த தடைகளை தள்ளி வீழ்த்திவிட்டு மாணவர்கள் முன்னால் செல்ல முயன்றனர்.

இவ்வேளையில் கண்ணீர்ப்புகை தாக்குதலை நடத்தி பொலிஸார், ஆர்ப்பாட்டக்காரர்களை விரட்டியடித்துள்ளனர்.
இதனால் அந்தப் பகுதியில் பதற்றமான நிலைமை உருவாகியிருந்ததது.

வீடியோ: https://fb.watch/dxHeMuvimy/