June 14, 2025 12:10:48

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

இலங்கையில் மற்றுமொரு நாடாளுமன்ற ஊடகவியலாளருக்கும் கொரோனா தொற்று உறுதியானது

சிங்கள பத்திரிகை ஒன்றின் நாடாளுமன்ற பெண் ஊடகவியலாளர் ஒருவருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.

அரசமைப்பின் 20 ஆவது திருத்தச் சட்டம் மீதான வாக்கெடுப்பு தொடர்பில் செய்தி சேகரிப்பதற்காக நாடாளுமன்றம் சென்ற ‘சண்டே ரைம்ஸ்’ பத்திரிகையின் ஊடகவியலாளர் ஒருவருக்கு ஏற்கனவே கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டிருந்த நிலையில், இரண்டாவது ஊடகவியலாளருக்கும் தற்போது கொரோனாத் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.