June 15, 2025 18:30:17

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

செயலிழந்திருந்த பி.சி.ஆர்.பரிசோதனை இயந்திரம் திங்கட்கிழமையிலிருந்து இயங்கும்;சீன குழு அறிவிப்பு

இலங்கையில் செயலிழந்திருத்த பி.சி.ஆர்.பரிசோதனை இயந்திரத்தின் கோளாறு 10 மணிநேர ஆய்வுக்குப் பின்னர் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக சீனாவிலிருந்து வருகை தந்திருந்த தொழில்நுட்ப வல்லுநர் குழுவினர் தெரிவித்துள்ளனர்.

மேலும் மேற்படி இயந்திரம் தற்சமயம் சரிசெய்யப்பட்டுவருவதாகவும்,எதிர்வரும் திங்கட்கிழமை முதல் அதன் பயன்பாடு வழமைக்கு திரும்பும் என்றும் அந்த குழுவினர் தெரிவித்துள்ளனர்.