June 14, 2025 14:36:50

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

இறுதி யுத்தத்தில் உயிரிழந்தவர்களுக்கு காலிமுகத்திடலில் அஞ்சலி!

இறுதி யுத்தத்தின் போது உயிரிழந்தவர்களை நினைவுகூர்ந்து கொழும்பு காலிமுகத்திடலில் அஞ்சலி நிகழ்வு நடத்தப்பட்டது.

காலிமுகத்திடலில் அமைக்கப்பட்டுள்ள ‘கோட்டா கோ கம’ பகுதியில் இந்த நிகழ்வு இடம்பெற்றது.

இதன்போது அங்கிருந்த மத குருமார்கள் மற்றும் சிவில் அமைப்புகளை சேர்ந்தோர் சுடர் ஏற்றி யுத்தத்தில் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தினர்.

யுத்தத்தில் உயிரிழந்தவர்கள், யுத்தத்தின்போது காணமலாக்கப்பட்டவர்கள், கைது செய்யப்பட்டவர்கள் உள்ளிட்டவர்களை நினைவுகூறும் முகமாக இந்த நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டதாக ஏற்பாட்டுக் குழுவினர் தெரிவித்தனர்.

இதேவேளை முள்ளிவாய்க்கால் பகுதியில் சிவில் அமைப்புகள் மற்றும் அரசியல்கட்சிகள் இணைந்து நினைவேந்தல் நிகழ்வை நடத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.