June 11, 2025 5:39:48

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

பலத்தை உறுதிப்படுத்திய மொட்டு: பிரதி சபாநாயகராக ராஜபக்‌ஷ!

ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன உறுப்பினர் அஜித் ராஜபக்‌ஷ பிரதி சபாநாயகராக தெரிவாகியுள்ளார்.

புதிய பிரதி சபாநாயகரை தெரிவு செய்வதற்கான வாக்கெடுப்பு இன்று பாராளுமன்றத்தில் நடைபெற்றது.

இதன்போது பொதுஜன பெரமுன சார்பில் பரிந்துரைக்கப்பட்ட அஜித் ராஜபக்‌ஷவுக்கு ஆதரவாக 109 பேர் வாக்களித்துள்ளனர்.

இதேவேளை எதிர்க்கட்சி சார்பில் பரிந்துரைக்கப்பட்டிருந்த ரோஹிணி குமாரி கவிரட்ணவுக்கு ஆதரவாக 78 பேர் வாக்களித்துள்ளனர்.

இந்நிலையில் 23 வாக்குகள் நிராகரிக்கப்பட்டுள்ளதாக சபாநாயகர் அறிவித்துள்ளார்.

இதன்படி 31 வாக்குகள் வித்தியாசத்தில் அஜித் ராஜபக்‌ஷ வெற்றிபெற்றுள்ளார்.