June 13, 2025 14:53:54

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

”ஜனாதிபதி அவ்வாறு கூற மாட்டார் என நம்புகின்றேன்”

தன்னை பதவி விலகுமாறு ஜனாதிபதி கூறவில்லை என்று பிரதமர் மகிந்த ராஜபக்‌ஷ தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி அவ்வாறு கூறுவார் என்று தான் நம்பவில்லை என்றும் பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.

இன்று கொழும்பில் ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பிரதேச சபை தவிசாளர்கள், மேயர்கள் மற்றும் மாவட்ட தலைவர்களுடனான சந்திப்பின் போதே பிரதமர் இதனை தெரிவித்துள்ளார்.

இதேவேளை பெரும்பான்மை வாக்குகளால் உருவாக்கப்பட்ட அரசாங்கத்தின் பிரதமர் என்றும் மக்களின் இறையாண்மைக்கு பிரதமர் தலைவணங்கினால் அவர் தொடர்ந்தும் அந்த பதவியில் நீடிக்க வேண்டும் எனவும் பிரதேச சபைகளின் தவிசாளர்களும் மேயர்களும் தீர்மானத்தையும் நிறைவேற்றியுள்ளனர்.