May 25, 2025 7:56:39

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

‘அரசாங்கத்தை விரட்டியடிப்போம்’: பேருவளையில் இருந்து பேரணியை ஆரம்பித்தது ஜே.வி.பி!

‘மக்களை வதைக்கும் அரசாங்கத்தை விரட்டியடிப்போம்’ எனும் தொனிப்பொருளில் ஜே.வி.பியினர் பேருவளை நகரில் இருந்து கொழும்பு நோக்கி மக்கள் பேரணியொன்றை ஆரம்பித்துள்ளனர்.

இன்று காலை ஆரம்பமான பேரணி எதிர்வரும் 19 ஆம் திகதி கொழும்பை வந்தடையும் என்று ஜே.வி.பி செயலாளர் ரில்வின் சில்வா தெரிவித்துள்ளார்.

பெருந்திரளான மக்கள் அரசாங்கத்தை விரட்டியடிப்போம் என்ற கோசங்களை எழுப்பியவாறு பேரணியில் கலந்துகொண்டுள்ளனர்.

இந்தப் பேரணி வாதுவை, மொரட்டுவை நகரங்களின் ஊடாக கொழும்பு நகர மண்டபம் வரையில் இடம்பெறவுள்ளது.

Video: https://fb.watch/crGzIi4qoP/