February 23, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

முன்னாள் கிரிக்கெட் வீரர் உண்ணாவிரதப் போராட்டம்!

இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னால் வீரர் தம்மிக பிரசாத், கொழும்பு காலிமுகத்திடலில் உண்ணாவிரதப் போராட்டத்தை ஆரம்பித்துள்ளார்.

ஈஸ்டர் தாக்குதலில் பாதிக்கப்பட்டோருக்கு நீதிகோரியே அவர் இந்தப் போராட்டத்தை ஆரம்பித்துள்ளார்.

ஜனாதிபதிக்கும், அரசாங்கத்திற்கும் எதிராக காலிமுகத்திடலில் இளைஞர்கள் தொடர்ச்சியாக போராட்டத்தில் ஈடுபட்டுள்ள நிலையில், அந்தப் போராட்டத்துடன் தம்மிக்க பிரசாத்தும் இணைந்துகொண்டுள்ளார்.

இந்நிலையில் அவர் இன்று காலை முதல் அங்கு உண்ணாவிரதப் போராட்டத்தை முன்னெடுக்கின்றார்.

இதேவேளை கொழும்பு காலிமுகத்திடலில் ஜனாதிபதி செயலகத்திற்கு முன்னால் இளைஞர்களினால் கடந்த சனிக்கிழமை ஆரம்பமான போராட்டம் ஏழாவது நாளாகவும் இன்று தொடர்கிறது.